அரசு பள்ளி ஆய்வுக்கூடத்தில் புகுந்த பாம்பு - அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர். நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆய்வுக்கூடத்தில் பெரிய பாம்பு இருப்பதை பார்த்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் ஆய்வுக்கூடத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து சென்றனர். பள்ளியில் பெரிய பாம்பை பார்த்த மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story