தொழிலதிபர் வீட்டில் இறந்து கிடந்த பணிப்பெண் - கொலையா? என விசாரணை

சென்னை பெசன்ட்நகரில் தொழிலதிபர் வீட்டில் பணிப்பெண் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் வீட்டில் இறந்து கிடந்த பணிப்பெண் - கொலையா? என விசாரணை
x
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் தொழிலதிபர் முருகானந்தம், காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற 19வயது இளம் பெண் ரத்த காயங்களுடன் இறந்தநிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொழிலதிபர் முருகானந்தனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாலட்சுமி உடம்பில் சூடு வைத்த காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்