என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்? அவன் பின்னணி என்ன?
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்?
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆனந்தனுக்கு வயது 28. பிளம்பராக வாழ்க்கையை தொடங்கிய ஆனந்தன், பின்னாளில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளான்.
ஐஸ் ஹவுஸ், பட்டினப்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், ஆனந்த் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாதாரண சங்கிலி பறிப்பு திருடனாக இருந்த ஆனந்தன், பிற்காலத்தில் ஒன்பது பேர் கொண்ட நகை பறிப்பு கும்பலுக்கு தலைவன் ஆனான். கடந்த 2014-ஆம் ஆண்டிலே காவலர் ஒருவரை தாக்கியதாக, ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளான்.
2015-ஆம் ஆண்டில், ஆனந்தன் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 2016-ஆம் ஆண்டிலும், அவன் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் போடப்பட்டுள்ளன. 5 கொலை முயற்சி வழக்குகள் உட்பட, ஆனந்த் மீது மொத்தமாக 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை, அவன் 8 முறை சிறை சென்றுள்ளான்.
எந்த நேரத்திலும், போதையிலே பொழுதைக் கழிக்கும் ஆனந்தன், காவலர் ராஜவேலுவை தாக்குவதற்கு முன்பு, பெரிதாக அறியப்படாதவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story