விபத்தில் சிக்கிய ஐபிஎல் தொடரின் முதல் பழங்குடியின வீரர் - வெளியான தகவல்

x

ஐபிஎல் தொடரின் முதல் பழங்குடியின வீரர் ராபின் மின்ஸ், விபத்தில் சிக்கியுள்ளார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்டரான ராபின் மின்ஸை, குஜராத் அணி 3 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதன்மூலம் அவர், ஐபிஎல் தொடரின் இடம்பெறும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தநிலையில் ராபின் மின்ஸ், இருசக்கர வாகன விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் அவருக்கு வலது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் நன்றாக இருப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார். விபத்தில் இருசக்கர வாகனம் சிறிய அளவில் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்