செஸ் ஒலிம்பியாட் : "அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான வசதிகள்..!"

x

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கான 95 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடக்க விழாவுக்கான பணிகளை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்றுக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் எனவும் தொடக்க விழாவில் தமிழ் பண்பாடு மற்றும் இந்தியாவின் பிற மாநில பண்பாடுகளை காட்சிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்