உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரருக்கு அனுமதி மறுப்பு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற நோவக் ஜோகோவிச்-க்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற நோவக் ஜோகோவிச்-க்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி மறுத்துள்ளது. உலகின் நம்பர் ஓன் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் மெல்போன் சென்றடைந்தார். ஆனால் அவர் தடுப்பூசி செலுத்தியது தொடர்பான சான்றிதழை சமர்பிக்கவில்லை என கூறி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவரது விசாவை ஆஸ்திரேலிய அதிகாரிகள் ரத்து செய்தது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story