பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நடால் அபார வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினைச் சேர்ந்த முன்னணி வீரர் ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நடால் அபார வெற்றி
x
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நடால் அபார வெற்றி 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினைச் சேர்ந்த முன்னணி வீரர் ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.பாரிஸ் நகரில் நடந்த ஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் 3-ம் நிலை வீரரான ரபேல் நடால், அர்ஜென்டினாவை சேர்ந்த 10-ம் நிலை வீரரான ஸ்வாட்ஸ்மேனுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-க்கு 3 என நடால் கைப்பற்ற, அடுத்த செட்டை 4-க்கு 6 என ஸ்வாட்ஸ்மேன் வென்றார். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்த நிலையில், 6-க்கு 4, 6-க்கு பூஜ்யம் என அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி காலிறுதியில் நடால் வென்றார். களிமண் ஆடுகள நாயகன் என வர்ணிக்கப்படும் நடால், இதன்மூலம், பிரெஞ்சு ஓபன் தொடரில் 14-வது முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.
 

Next Story

மேலும் செய்திகள்