"ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் ரெய்னா" - சிஎஸ்கே நிர்வாகத்தின் அதிர்ச்சி அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீர‌ர் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரும், நட்சத்திர வீர‌ராகவும் உள்ள சுரேஷ் ரெய்னா, சமீபத்தில் தோனியுடன் சேர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவு அறிவித்தார். 33 வயதில் அவரது இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே அவரை காணமுடியும் என்பதால் வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரை அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில்ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்பதற்காகவே துபாய் சென்றிருந்த ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினர் சில தனிப்பட்ட  காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளனர். இதனை சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ விஸ்வநாதன் தங்கள் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் ரெய்னா ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சி.எஸ்.கே ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்