ஐ.பி.எல். ஆட்சிமன்ற கூட்டம் கூடியது - மே 31ஆம் தேதி வரை போட்டியை நடத்த திட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் இன்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்றது.
ஐ.பி.எல். ஆட்சிமன்ற கூட்டம் கூடியது - மே 31ஆம் தேதி வரை போட்டியை நடத்த திட்டம்
x
இந்த கூட்டத்தில் 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, ஐ.பி.எல். போட்டிகளை மே 24ஆம் தேதிக்கு பதிலாக மே 31ஆம் தேதி வரை நடத்தலாம் என்றும்,  வார இறுதி நாட்களில் மாலை நேரத்திலும் போட்டியை நடத்தலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இம்மாத இறுதி வரை காத்திருந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வரை பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது குறித்தும், இழப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனிடையே, ஐ.பி.எல். ஒத்திவைக்கப்பட்டது நல்ல முடிவு என்றும், ரசிகர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐ. அனைத்து அணி உரிமையாளர்களை அழைத்து பேசி சரியான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் ஷாரூக்கான் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்