ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா முன்னேற்றம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா- கொல்கத்தா அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா முன்னேற்றம்
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா- கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை . இரண்டாம் பாதியில் கொல்கத்தா வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா 49வது , 60வது மற்றும் 63 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.  இறுதிவரை போராடிய ஒடிசா அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. முடிவில் கொல்கத்தா 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்