தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, திட்டமிட்டபடியே அபாரமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சதம் விளாச, புஜாரா அரை சதம் கடந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் கோலி, 254 ரன்கள் குவிக்க, ரகானே அரைசதமும் , ஜடேஜா 91 ரன்களும் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு 602 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தனர். தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, விராத் கோலியின் ஸ்கோரான 254 ரன்களை கடக்கவே சிரமப்பட்டது. கேப்டன் டுபிளசிஸ், கேஷவ் மகாராஜ் மற்றும் ஓரளவு தாக்குப்பிடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் அந்த அணி, 275 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக வீரர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Next Story