டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : இரண்டாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : இரண்டாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
x
நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது , இதனையடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 19 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து,  நாளை சென்னையில் நடைபெறும் இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது.

Next Story

மேலும் செய்திகள்