இந்திய அணி கடைசி வரை வெற்றி பெற போராடியது - பிரதமர் மோடி ட்வீட்

வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் அங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கடைசி வரை வெற்றி பெற போராடியது - பிரதமர் மோடி ட்வீட்
x
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது தொடர்பாக பிரதமர் மோடி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முடிவு ஏமாற்றம் அளித்தாலும் , இறுதி வரை வெற்றி பெற முயற்சித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கின் சிறப்பாக செயல்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

100 கோடி இந்திய ரசிகர்களின் இதயங்கள் உடைந்தது - ராகுல் காந்தி
 



அரை இறுதி போட்டி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 100 கோடி இந்திய ரசிகர்களின் இதயங்கள் உடைந்தது எனவும்இந்திய வீரர்கள் இறுதி வரை போராடியதால் நமது அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்களே என கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்