உலக கோப்பை அரையிறுதி போட்டி : இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு

இந்தியா- நியூசிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நாளை போட்டி தொடரும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.
உலக கோப்பை அரையிறுதி போட்டி : இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு
x
போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் மார்டின் கப்தில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.46 புள்ளி1 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை இடை விடாது பெய்ததால், மீதமுள்ள ஆட்டம் நாளை தொடரும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன்படி நியுசிலாந்து அணி, 46 புள்ளி 1 ஓவர்களில் இருந்து தனது ஆட்டத்தை தொடர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்