ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நாதன் கௌட்னர் நிலே 92 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story