ஐ.சி.சி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து vs இலங்கை - விக்கெட் இழப்பின்றி வென்றது நியூசிலாந்து
ஐ.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்த நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்தது. இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்தார். ஆனால் மற்ற 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் ஹென்றி மற்றும் லாக்கி ஃபர்கூசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டியது. கப்தில் மற்றும் மன்ரோ அரைசதம் கடந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சாளர் மாட் ஹென்றி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Next Story