36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டி : பெண்கள் பிரிவில் கேரள அணி வெற்றி

கோவையில் நடைபெற்ற 36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டியில், பெண்கள் பிரிவில் கேரள அணி கோப்பையை கைப்பற்றியது.
36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டி : பெண்கள் பிரிவில் கேரள அணி வெற்றி
x
கோவையில் நடைபெற்ற 36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டியில், பெண்கள் பிரிவில் கேரள அணி கோப்பையை கைப்பற்றியது. 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டிகள் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. 25 மாநிலங்களை சார்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன் இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் கேரள அணியை எதிர்த்து விளையாடிய தமிழக அணி, 69 புள்ளிகள் எடுத்து தோல்வியை தழுவியது. வெற்றி பெற்ற கேரள அணிக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், 2ஆம் இடம் பிடித்த தமிழகத்திற்கு 1 லட்சம் ரூபாயும், 3ஆம் இடம் பிடித்த ராஜஸ்தானுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்