இறுதி போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி...

6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி...
x
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை-மும்பை அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய சென்னை அணி,  20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களையும், தோனி 37 ரன்களையும் எடுத்தார். இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன்  மும்பை அணி களம் இறங்கியது. சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இதனையடுத்து மும்பை அணி 18 புள்ளி 3 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து மும்பை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

சென்னை அணி தோல்வி - ரசிகர்கள் சோகம்...
 



Next Story

மேலும் செய்திகள்