ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது வழக்கு பதிவு

பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது வழக்கு பதிவு
x
பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பி.சி.சி.ஐ இருவரையும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்திருந்த‌து. தற்போது தடை நீங்கி, ஹர்திக் பாண்டியா அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், உள்ள காவல் நிலையம் ஒன்றில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்