ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் இந்திய அணியில் அதிரடி மாற்றம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த காரணத்தால் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் இந்திய அணியில் அதிரடி மாற்றம்
x
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த காரணத்தால் தொடக்க ஆட்டக்கார‌ர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். 

அதன்படி, வெளியேற்றப்பட்ட கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக, மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், மயங்க் அகர்வால், விஹாரி ஜோடி மூன்றாவது டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்கார‌ர்களாக அறிமும் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, காயத்தில் இருந்து மீளாத அஸ்வினுக்கு பதில், ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இதேபோல ஆஸ்திரேலிய அணியிலும், பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் - க்கு பதிலாக மிட்சல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இந்திய நேரப்படி, நாளை காலை 5 மணியளவில் தொடங்குகிறது. 


Next Story

மேலும் செய்திகள்