இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் இலக்கு

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியா 323 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் இலக்கு
x
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியா 323 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா 250 ரன்களும், இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 235 ரன்களையும் எடுத்தது. இந்நிலையில் 15 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக புஜாரா, 71 ரன்களும், ரகானே 70 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேஸியா அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 104 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சிய நிலையில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, இன்னும் 219 ரன்களை எடுக் வேண்டும். 

Next Story

மேலும் செய்திகள்