மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அரை இறுதியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி

மகளிர் டி டுவண்டி உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்த‌தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அரை இறுதியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி
x
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய மகளிர் அணி 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. இந்திய அணி சார்பில்,அதிகபட்சமாக மந்தனா 34 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் கேப்டன், ஹேத்தர் நைட் 2 ஓவர் வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின், தொடக்க ஆட்டக்கார‌ர்களை இந்திய அணி வந்த வேகத்தில் பெவிலியன் திருப்பியது. ஆனால், அடுத்த‌தாக களம் இறங்கிய ஏமி ஜோன்ஸ் மற்றும் நட்டாளி ஸ்கீவர் இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர்.    

Next Story

மேலும் செய்திகள்