பானிபூரி விற்று கிரிக்கெட் வீரரான யாஷாவி..U-19 இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்தவர்....
யாசஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து தற்போது வெற்றிப் பாதைக்கு வந்த 16 வயது கிரிக்கெட் வீரர்...
* உத்தரப் பிரதேச மாநிலம் BHADOHI கிராமத்தை சேர்ந்த YASHASVI.. ஏழ்மை காரணமாக 11 வயதில் மும்பைக்கு சென்றார். மாமாவின் பால் பண்ணையில் பணிபுரிந்த போது தான் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் அடியேடுத்து வைத்தார். காலையில் பயிற்சி மேற்கொள்ள சென்றதால், மாமா அவரை பணியிலிருந்து துரத்தி விட்டார். இதனால் மும்பையில் யாருமே இல்லாத யாசாஸ்வி, ஒரு உள்ளூர் அணியில் சேர்ந்தார்.
* அங்கு YASHASVI JAISWAL தற்காலிக டெண்ட் அமைக்கப்பட்டு, அதில் தங்க வைக்கப்பட்டார். அதில் தங்கி கிரிக்கெட் விளையாடும் போது, சக வீரர்களிடம் அடி வாங்குவது, வீரர்களுக்கு சமைப்பது என பல்வேறு பிரச்சனைகளை YASHASVI JAISWAL சந்தித்தார். பணப் பிரச்சனையை சமாளிக்க ஜாய்ஸ்வால், பாணி பூரி விற்றுள்ளார். 12 வயதில் வாழ்க்கையை வெறுத்த போன தருணத்தில், கிரிக்கெட் பயிற்சியாளர் JWALA SINGH அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு அவரின் வாழ்க்கையே மாற்றியது. உள்ளூர் கிரிக்கெட்டில் JAISWAL ஐ பயிற்சியாளர் விளையாட வைத்தார். அப்போது மூன்று ஆண்டுகளில் ஜாய்ஸ்வால், 51 சதம் விளாசினார். ஜெய்ஸ்வாலுக்கு விளையாட பேட் இல்லாத தருணத்தில் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், சச்சின் டெண்டுல்கர் அவருக்கு பேட் வாங்கி தந்துள்ளனர்.
* தனது திறமையால், 19 வயதுக்குட்பட்டவருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஜாய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஆசிய கோப்பையில் ஜாய்ஸ்வால் 318 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாலும், நம்பிக்கையும் விடாமுயற்சியையும் விடாமல் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதே ஜாய்ஸ்வால் நமக்கு கூறும் வாழ்க்கை பாடம்..
Next Story