இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : விக்கெட் வீழ்த்த இந்தியா முனைப்பு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : விக்கெட் வீழ்த்த இந்தியா முனைப்பு
x
முதல் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து  வீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முதல் இன்னிங்சில் 35வது ஓவரில் 107 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 29 ரன்களும், கோலி 24 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி  சற்று முன்னர் வரை 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்