இந்திய அணியின் கேப்டனாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு

சர்வதேச கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் கேப்டனாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு
x
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள எடமேலையூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வாங்கியுள்ளார். 

கேரள அணியில் விளையாடி வந்த முத்துசாமி இந்திய கைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்த 8 மாதங்களாக பயிற்சி எடுத்து வந்தார். 

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும்  21 வயது உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த எடமேலையூர் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முத்துசாமி சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்