கோலாகலமாக தொடங்கியது, டி.என்.பி.எல். கிரிக்கெட் - முதலாவது லீக் போட்டியில் திருச்சி அணி திரில் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் திண்டுக்கல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திருச்சி அணி திரில் வெற்றி பெற்றது.
கோலாகலமாக தொடங்கியது, டி.என்.பி.எல். கிரிக்கெட் - முதலாவது லீக் போட்டியில் திருச்சி அணி திரில் வெற்றி
x
நெல்லையில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.ரோகித் 46 ரன்களும், அஸ்வின் 42 ரன்களும் எடுத்தனர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி வீரர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இறுதியில் குமார் 24 பந்துகளில் 45 ரன்களும், சோனு 17 பந்துகளில் 30 ரன்களும் விளாசினர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்  திருச்சி அணி ஒரு பந்து மீதமிருக்கும் போது 175 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்