ஒரே நாளில் 141 புகார்கள் - தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்

x

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்காக 68 ஆயிரத்து144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.

டிசம்பர் மாதத்திற்கு பின்,90 ஆயிரம் முதல் வாக்காளர்கள் சேர்ந்துள்ள நிலையில், 18-19 வயதுடைய வாக்காளர்கள் மொத்தம் 10 லட்சத்து 45 ஆயிரத்து 470 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சி விஜில் செயலி மூலம் நேற்று ஒரே நாளில் 141 புகார்கள் பெறப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக சென்னையில் 21 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். சுவர் விளம்பரம் சம்பந்தமான புகார்களே அதிகம் பெறப்பட்டுள்ளன குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தல் செலவிற்காக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாக கூறிய சாகு,

எம்.பிக்கள் தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்