"தஞ்சை சரஸ்வதி மகாலுக்கு நிரந்தர இயக்குனர்" - பேரவை நூலக குழுத் தலைவர் தகவல்

x

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலுக்கு நிரந்தர இயக்குனர் மற்றும் மற்றும் அலுவலர்கள் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக் குழுத் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார். அவருடைய தலைமையில் 5 சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சை சரஸ்வதி மஹால் உள்ளிட்ட நூலகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சரஸ்வதி மகாலில் நூல்கள் மற்றும் ஓலைசுவடிகள்

சிறப்பாக பராமரிக்கப்படுவதாக சுதர்சனம் கூறினார். சரஸவதி மகாலுக்கு முழு நேர இயக்குனர் மற்றும் அலுவலர்கள் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்