பிரச்சாரத்தில் நடிகை கௌதமி கொடுத்த வாக்குறுதி

x

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரை ஆதரித்து, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், நடிகை கௌதமி வாக்கு சேகரித்தார். கொக்கராயன்பேட்டை, விடியரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், இந்த தேர்தல், தமிழ்நாடு மக்களின் எதிர்காலம், தமிழகத்தின் எதிர்காலம், இந்திய தேசத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கும் என்று கூறினார். மக்களின் தோளோடு தோள் நின்று பிரச்சனைகளை தீர்க்க கூடியவர் ஆற்றல் அசோக் குமார் என்றும் நடிகை கௌதமி வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்