நாற்று நட்டு கிராமிய பாடல் பாடி பாமக வேட்பாளர் தீவிர பிரசாரம்

x

திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா விவசாயிகளுடன் இணைந்து நாற்று நட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜக்காபட்டி பகுதியில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தம்பக்குளத்துப்பட்டி பகுதியில் விவசாயிகளுடன் இணைந்து கிராமிய பாடல் பாடியபடி நாற்று நட்டு திலகபாமா வாக்கு சேகரித்தார். மேலும், தான் வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவேன் என்றும், விவசாயிகளுக்கு உறுதுணையாக செயல்படுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்