"பிரேமலதா இதை செய்தால் விஜயகாந்த் தொண்டர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.." - புகழேந்தி பரபரப்பு பேச்சு

x

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய வேண்டிய இறுதி இடம் தேர்தல் ஆணையம் என்று, ஓ.பி.எஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். நெல்லையில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு ஆலோசனை கூட்டம் ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்று குற்றம் சாட்டினார். தேமுதிகவும் பிரேமலதா விஜயகாந்த்தும் தவறான முடிவெடுத்து எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி சென்றால் விஜயகாந்தின் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்