"தமிழக அரசின் வெள்ளை அறிக்கை, மக்களை திசை திருப்பும் செயல்" - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை, மக்களை திசை திருப்பும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
x
தமிழக அரசின் வெள்ளை அறிக்கை, மக்களை திசை திருப்பும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வெள்ளை அறிக்கையை, அவசரத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சாடினார். தேர்தல் வாக்குறுதிகளை, நிறைவேற்ற முடியாது என்பதை, திமுக மறைமுக சொல்வதாக கூறிய ஜெயகுமார், வெள்ளை அறிக்கை மூலம், பழி சுமத்தி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் இருந்த 17 ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகாலம், 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ள ஜெயகுமார், 50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கும் நிலையில் வைத்துவிட்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்