"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
x
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த  வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

card 1
கடந்த 10-ம் தேதி  புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை, பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட நிலையில்,
card 2
 காவிரிப்படுகையில், ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க கூடாது என்பது தான், தமிழக அரசின் கொள்கை என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
card 3
எதிர்காலங்களில் தமிழகத்தின் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டுவரக்கூடாது என்றும் 
card 4
தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

காவிரிப்படுகையின் வளத்தை கண்ணை இமை காப்பது போல அரசு காக்கும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடித்ததில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்