குறை கேட்கும் பயணம் தொடர்கிறது! : வெள்ளிக்கிழை 3-ம் கட்ட பயணம் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

தி.மு.கவிடம் குறைகளை சொன்னால் தான் அ.தி.மு.க செய்யும் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குறை கேட்கும் பயணம் தொடர்கிறது! : வெள்ளிக்கிழை 3-ம் கட்ட பயணம் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
x
தி.மு.கவிடம் குறைகளை சொன்னால் தான் அ.தி.மு.க செய்யும் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான கோரிக்கைகளை முன்வைத்த கோடிக்கணக்கான மக்களின் ஒற்றை நம்பிக்கையாக திமுக இருப்பதாக கூறியுள்ளார்.அந்த நம்பிக்கையை நிறைவேற்றிட நாம் மேலும் கவனமாக உழைத்திட வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.தி.மு.கவிடம் குறைகளை சொன்னால் தான் அ.தி.மு.க செய்யும் என்பதை மக்கள் நன்றாகவே அறிந்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.மக்களின் குறைகேட்க, மூன்றாவது கட்டமாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பயணத்தை வெள்ளிக்கிழமையன்று தொடங்க உள்ளதாக தெரவித்துள்ளார்.மக்களின் குரல் கேட்டு,குறை அறிந்து, ஆட்சிக்கு வந்த100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான பயணம் இது என்று தெரிவித்த ஸ்டாலின்,வெற்றிக்கனியை கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை இந்தப் பயணம் ஓயாது என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்