ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டு கடிதம் - பிரதமருக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயலால் சேதம் அதிகம் உள்ளதால் 100 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் கேட்டு பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டு கடிதம் - பிரதமருக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்
x
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, நிவர் புயல் காரணமாக விவசாயிகளுக்கு சேதம் அதிகம் என்றும், சாலைகளும், குடிசை வீடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். எனவே இடைக்கால நிவாரணமாக 100 கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்