வேளாண் மசோதா - குடியரசுத்தலைவர் ஒப்புதல்

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
x
வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையில், மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, அவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. குடியரசுத்தலைவர், ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 3 வேளாண் மசோதாக்களும் சட்டமானது.


Next Story

மேலும் செய்திகள்