"அதிகாரத்தை எடுத்து கொள்ளும் மத்திய அரசு" - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பன்முகத் தன்மையும் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்து கொள்வதாக தி.மு.க எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
x
பன்முகத் தன்மையும் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்து கொள்வதாக தி.மு.க எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் ஹோமியோபதி மத்திய மருத்துவ கவுன்சில் திருத்தச் சட்டத்தின் மீது உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளில் குரல் கேட்கப்படுவதில்லை என்றார். இதற்குப் பிறகாவது மாநில அரசுகளின் பரிந்துரையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தினார்.  இதனிடையே., ஹோமியோபதி மத்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது

Next Story

மேலும் செய்திகள்