மாநிலங்களவை எம்.பி. ஆனார் ரஞ்சன் கோகாய் - பதவி பிரமாணம் செய்து வைத்த வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை எம்.பி.யாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
x
மாநிலங்களவை எம்.பி.யாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று, பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்ப்பு குரல் எழுப்பினர். அப்போது, குடியரசு தலைவர் அவருக்குரிய அதிகாரத்தின் கீழ்  நியமனம் செய்திருப்பதாகவும், இதனை, விமர்சிப்பது சரியல்ல எனவும் வெங்கைய நாயுடு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்