சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சம் கேட்டு வருபவர்களுக்கு அடைக்கலம் தருவது இந்திய கலாச்சாரம் என தெரிவித்தார். சிலர் வரலாம், சிலர் வரக்கூடாது என்று சொல்வது தவறு என்றும், இந்திய கலாச்சாரத்தை மீறுவது மிகப்பெரிய ஆபத்து எனவும் அவர் கூறினார்.
Next Story