புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
x
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. கூட்டாட்சி தத்துவத்தின்படி துணைநிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். கருத்து வேறுபாடு தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனுப்பும் பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்