"கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றுவேன்" - அரவிந்த் கெஜ்ரிவால்

முதல்வராக பதவியேற்ற பின் டெல்லி மக்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், இந்த வெற்றி தனக்கான வெற்றியல்ல எனவும், டெல்லியில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கான வெற்றி என்றும் தெரிவித்தார்.
x
முதல்வராக பதவியேற்ற பின் டெல்லி மக்கள் மத்தியில் உரையாற்றிய  கெஜ்ரிவால், இந்த வெற்றி தனக்கான வெற்றியல்ல எனவும்,  டெல்லியில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கான வெற்றி என்றும் தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மியின் வெற்றி என்பது, ஒவ்வொரு பெண்கள், ஒவ்வொரு இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்குமான வெற்றி எனவும் அப்போது கெஜ்ரிவால் கூறினார். 

* விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரால் விழாவுக்கு வர இயலவில்லை என்று கூறிய கெஜ்ரிவால், பிரதமர் வந்து தங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

* ஆம்ஆத்மிக்கு யார் வாக்களித்தாலும், வாக்களிக்காமல் இருந்தாலும், தான் டெல்லி மக்களின் அனைவருக்குமான முதலமைச்சர் என்று கூறிய கெஜ்ரிவால் ஜாதி, மத, கட்சி பேதமின்றி தான் மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்