தேர்தல் பிரச்சார பேரணியில் அமித்ஷா பங்கேற்பு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்,கெஜ்ரிவால் அரசு கடந்த 5 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் பிரச்சார பேரணியில் அமித்ஷா பங்கேற்பு
x
டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்று உரையாற்றிய அவர், கடந்த  5 ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கிடையை நடைபெற்ற எந்தவொரு நிகழ்விலும், கெஜ்ரிவால் அரசு, முதலிடத்திற்கு வந்துள்ளதா? என கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவால்,வளர்ச்சி என்ற பெயரில் பேசினாரே தவிர எதுவும் செய்யவில்லை என்றார். பொய்களை மட்டுமே பரப்பியதாக குற்றம்சாட்டிய அமித்ஷா. பொய் கூறுவதில் வேண்டுமானால்  கெஜ்ரிவால் முதலிடத்தைப் பெறுவார் என விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்