"அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் : தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள், தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவினர் ஆன்மீகவாதிகள், தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆன்மீகம் பெருகினால் தான் நாட்டில் கலவரமில்லாமல் இருக்கும் என கூறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மீக ஆட்சி நடத்தியதாகவும், அதேபோன்று தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஆன்மீக ஆட்சி நடத்துவதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்