"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும் -  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்
x
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய  அவர், ஒரு சட்டத்தை எதிர்த்து, மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்றும்,  அந்த சட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசை வேண்டுமானால் வலியுறுத்தலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், பின்பற்ற மாட்டேன் என  மாநில அரசு கூறுவது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கபில்சிபல் கூறியுள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்