"8 பேர் கைது - 8 கோடி பேர் கோலமிட காத்திருப்பு" - மா.சுப்பிரமணியன், திமுக எம்.எல்.ஏ

கோலமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால், 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருப்பதாக, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
கோலமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால், 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருப்பதாக, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் கடைசி நாளான இன்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஒட்டுமொத்த தமிழர்களும் வாசலில் கோலமிட தொடங்கி விட்டதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்