"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை" - டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

"மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்"
x
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150 - ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக பட்டியலிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்