உன்னாவ் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் : முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போராட்டம்
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உன்னாவ் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டதில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சம்பவம் நடந்து முடிந்த இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும், உத்தரபிரதேச முதலமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோர் இதுவரை பதவி விலகவில்லை என்றும் அகிலேஷ் யாதவ் வேதனை தெரிவித்தார்.
Next Story