"செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிப்பு இல்லை" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் ரேடியோ கதிர்களால் மனிதர்களுக்கோ,சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிப்பு இல்லை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
x
செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் ரேடியோ கதிர்களால் மனிதர்களுக்கோ,சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும்  இல்லை என்று,  மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்வி ஒன்றிற்கு மக்களவையில் பதில் அளித்த அவர், 2014ஆம் ஆண்டு எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், மனிதர்கள், மிருகங்கள், மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதற்கும், செல்போன் டவரில் இருந்து வெளிவரும் கதிர்களுக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளதாக விளக்கமளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்