மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் : கே.சி. வேணுகோபால் தகவல்

மகாராஷ்டிர மாநில அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்ததாக, அக்கட்சியின் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் : கே.சி. வேணுகோபால் தகவல்
x
மகாராஷ்டிர மாநில அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்ததாக, அக்கட்சியின் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே இன்று பேச்சு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக நாளைக்குள் முடிவு எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்