கர்நாடக இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு

கர்நாடகவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
x
குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர்.அவர்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்த கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர்கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரையும் தகுதிநீக்கம் செய்தார்
இந்நிலையில், 17 எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் தேர்தலை தள்ளிவைப்பதாக அறிவித்து, வழக்கு விசாரணையை வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்